Thursday 25 September 2014

பெண்கள் சொத்துரிமை

பெண்கள் தங்கள் சொத்துரிமையை தங்கள் சகோதரனுக்காக இலவசமாகவோ, சொற்ப பணம் பெற்றுக்கொண்டோ விட்டுக்கொடுக்கிறார்கள். இன்றைய சட்டங்கள் பெண்கள் நினைத்தால் தாங்கள் விட்டுக்கொடுத்ததை மீட்டுக்கொள்ளவும் பல ஓட்டைகள் வைத்துள்ளன என்பதும் வேறு விஷயம். பெரும்பாலும் சிறுவிவசாயிகளை கொண்ட நாட்டில் நிலங்கள் பிரிக்கப்பட்டால் குடும்பம் நடத்தும் அளவுகூட வருமானத்தை பெற முடியாது. சொத்தை பெற்ற பெண்ணும் மைல்கள் தாண்டி வந்து விவசாயம் செய்ய இயலாது என்பது வேறு விஷயம். நம் நாட்டு சட்டங்கள் குடும்பங்களுக்குள் புகைச்சல் வர எவ்வளவு முடியுமோ அவ்வளவு சட்டங்களை "தேசபக்தர்" கும்பல்களின் அழுத்தத்தால் உருவாக்கியுள்ளன. குறைந்தபட்சம் நில விஷயத்திலாவது சொத்துரிமை சட்டம் திருத்தப்பட வேண்டும். சிறுவிவசாயிகள் பெண்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளார்கள். தங்கள் கல்யாணத்துக்காகவும் சீர்களுக்காகவும் பல சிரமங்கள் பட்ட பெற்றோர் மீது பெண்களின் இந்த குடும்பப் பாசம் இல்லாவிட்டால் இன்று பலரின் மிராசு டம்பமெல்லாம் என்றோ காற்றில் பறந்திருக்கும். பெண்கள் கூட குடும்ப பாசம் என்று சொல்லலாம்; ஆனால் அவர்கள் கணவர்கள் சொந்தம் முக்கியம் என்ற காரணத்தால் சொத்தை விட்டுக்கொடுக்கிறார்கள். பெண்கள் மற்றும் அவர்கள் கணவர்கள் போட்ட பிச்சையை மறந்த நன்றிகெட்ட விதிவிலக்குகள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்காக பெரும்பான்மையை குற்றம் சொல்ல முடியாது.
*பெண்கள் விவசாயத்தின்-கிராமத்தின் கண்கள்*

No comments:

Post a Comment