Thursday 25 September 2014

வளர்ந்த நாடுகள்

அரசியல்வாதிகள் பேசும்போது வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகளை குறிப்பிட்டு அந்த நாடுகளைப் போல இந்தியாவை மாற்றுவோம், என்று சொல்கிறார்கள். அது தவறு, அது சாத்தியமுமில்லை. பணப்புழக்கமுள்ள தொழில்களை மட்டும் செய்வதாலும், பெரு நிறுவனங்களின் மையங்களை கொண்டிருப்பதாலும் தான் இந்த பணக்கார தோற்றம். ஏராளமான ஏழை நாடுகளின் இயற்கை மற்றும் மனித வளங்களை சுரண்டியும் அழுக்காக்கியும்தான் பணக்கார நாடுகள் தங்கள் பகட்டான தோற்றத்தை தக்க வைக்கிறார்கள். எல்லா நாடுகளிலும் இந்த தொழில் முறை சாத்தியமில்லை. எல்லா நாடுகளும் சுரண்டலை கையிலெடுத்தால் உலகம் தாங்காது. மலைகளும், காடுகளும், நதிகளும் சீரழிந்து போகும். உலகமே மனித நுகர்வுக்குத்தான் என்ற வெளிநாட்டு சித்தாந்தங்களின் வெளிப்பாடு அது. நம்மை இயற்கையோடு இணைத்துக்கொண்டால் வாழ்வு பூரணமாக இருக்கும். அதை தற்போது பல நண்பர்கள் அந்த வாழ்க்கை முறையில் எல்லா கோணங்களிலும் வெற்றி பெற்று வருகிறார்கள்.
ஆக, வளர்ச்சிப் பொருளாதாரம் என்றும் இந்தியாவை அதுவாக இதுவாக ஆக்குகிறேன் என்றும் சொன்னால், நீங்க எதுவாகவும் ஆக்க வேண்டாம் இந்தியா சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை மிகச் சிறப்பாகத்தான் இருந்தது; காலனிய, கம்யூனிச, முற்போக்கு குழப்பங்களால் சீரழிந்ததை மீட்டுக் கொடுங்கள் போதும் என்று சொல்லுங்கள்.

No comments:

Post a Comment