Tuesday 26 August 2014

கொடுமுடி பண்டிதர்

பல ஆயிரம் ஆண்டுகளாக நம் தேசத்தில் வழக்கமாக இருந்த பஞ்சகவ்ய பயன்பாடு பிற்காலத்தில் நீறு பூத்த நெருப்பாக மறைந்திருந்தது. பிராமணர்கள் விடாது தங்கள் பூஜைகள், அபிசேகங்களில் பயன்படுத்தி வந்தனர். ஈ.வெ.ரா. இந்த பஞ்சகவ்யம் பற்றி நீண்ட/ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து அரவது ஆய்வு முடிவை  இவ்வாறு வெளியிட்டார், 'பார்ப்பான் மாட்டு மூத்திரத்த கொடுக்கறான் "நம்மாளு" வாங்கி குடிக்கறான்' என்றார். நம்மாளு என்று யாரையெல்லாம் கூட்டு சேர்த்தார் என்று தெரியவில்லை. பின்னாளில் கொடுமுடி டாக்டர் மூலமாக பஞ்சகவ்யத்தின் பலன்கள் வெகுஜனங்களுக்கு தெரிய வந்தது. (பாட்டன் சொல்வதை விட வெள்ளை கோட்டும், வெள்ளை தோலும் தற்கால அறிவியல் விளக்கப்படி சொன்னால்தானே ஏற்றுக்கொள்வோம்?). கொடுமுடி டாக்டருக்கு இதை தெரிவித்தவர் கொடுமுடி பண்டிதர். அவர் கூறிய வார்த்தை, பஞ்சகவ்யம் "வந்த நோய் போக்கும்; வரும் நோய் தடுக்கும்" என்று. வெளியே இருபது வருடம் பரப்பிய டாக்டருக்கு கிடைத்த அங்கீகாரம் பல நூற்றாண்டுகளாக, திராவிட இம்சைகளுக்கு இடையேயும் விடாது பின்பற்றி மக்களுக்கும் தந்து கொண்டிருந்த அந்த பிராமணர்களுக்கு எவ்வித அங்கீகாரமோ மரியாதையோ இல்லை என்பது வருத்தத்திற்குரியது. இன்று அவர்கள் புண்ணியத்தில் பல லட்சம் ஏழைமக்கள் எளிய மருத்துவ தீர்வை பெற்று ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். பல லட்சம் ஏக்கர் பூமிகள் வளமடைந்து சுபிட்சமாகியுள்ளது. ஏழை விவசாயிகள் உர நிறுவனங்களில் இருந்து - விஷ உரங்களில் இருந்து விடுதலை பெற்றுள்ளனர். அதன்மூலம் பல கோடி பேருக்கு நல்ல உணவு கிடைக்கிறது. பஞ்சகவ்யத்தை பழித்த ஈ.வெ.ரா.வின் சிஷ்யப்பிள்ளைகள் வெப்படை கோசாலைக்கு விடியற்காலை முக்காடு போட்டுவந்து மருந்து வாங்கி குடித்துக் கொண்டிருக்கிறார்கள் .

No comments:

Post a Comment