Monday 28 July 2014

கல்யாணத்தில் ஆடம்பரங்கள்

வெகு சிலர், பிறர் தங்களை பெரிதாக நினைக்க வேண்டும் என்று குடும்ப விசேஷங்களை ஆடம்பரமாக செய்தனர். அதனால் சாதாரண மக்கள் பிறர் தங்களை தாழ்வாக நினைக்கக்கூடாது என்று அனாவசிய செலவுகள் பலவற்றை செய்யவேண்டிய சமூக அழுத்தத்திற்கு ஆட்பட்டனர். இதனால் தான் நம் முன்னோர்கள் சடங்குகள் என்றும் சீர்கள் என்றும் ஒரு காமன் கோட் வைத்திருந்தனர். இதனால் குடும்ப நிகழ்ச்சிகள் பாசம் பந்தம் வளர்க்கும் நிகழ்ச்சிகளாக இருந்தன. இன்று குடும்ப நிகழ்ச்சிகள் பொறாமை வெறுப்பு வளர்க்கும் நிகழ்ச்சிகளாக மாறி வருகிறது.

கல்யாணத்தில் ஆடம்பரங்களை புகுத்துவதை கற்பித்தது-அந்தந்த வட்டாரத்தில் பெரியமனிதர்களை நெட்வொர்க் செய்யும் மேற்கத்திய கிளப்புகள் தான். மேற்கடிமை ஒருவனை தலைவனாக கொண்டிருக்கும் அந்த கிளை கூட்டங்களில் நடைபெறும் 'புதுமைகள்' குடும்ப நிகழ்ச்சிகளுக்கு பரவியது. அவர்கள் செய்வது எளிதாக டிரென்டானது. கோட் சூட், பப்பே, மண்டபங்களில் கல்யாணம்,தாறுமாறான சீர்முறைகள் போன்றவை சில. அன்றும் சரி, இன்றும் சரி, சொந்தங்கள் சேர்ந்து பாரம்பரிய முறைகளில் சீர்கள் செய்து அவர்களே சமைத்து, பரிமாறி, எளிமையாக நடக்கும் கல்யாணகள்-விழாக்கள் மிக மகிழ்ச்சியாக, மீண்டும் எப்போ சந்திப்போம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்; மாடர்ன் குடும்ப நிகழ்ச்சிகள் பற்றி நான் சொல்லத்தேவையில்லை.

சயின்டிபிக்

நம் மக்களிடம் 'சயின்டிபிக்' என்ற சொல்லை பயன்படுத்திவிட்டால் அது கேள்விகளுக்கும் விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டதாகிவிடுகிறது. அங்கீகாரத்தின் உச்சம். கொடுமை என்னவென்றால், இந்த தற்கால சயின்டிபிக் அங்கீகாரம் இதைவிட பல ஆயிரம் வருடம் முன்பிருந்து வேலை செய்யும் பாரம்பரிய தொழில்நுட்பங்களுக்கும் தேவைப்படுகிறது. சரி, Modern/Western/Recent Scientific Justification-Authentication இல்லாவிட்டால் என்ன கெட்டுப்போகிறது? வேலை செய்யும் ஒரு நுட்பத்தை புரிந்துகொள்ள/விளக்க முடியாமை நவீன அறிவியலின் குறைபாடே ஒழிய அதற்காக காலம்காலமாக செயல்பட்டுவரும் தொழில் நுட்பம் பொய்யென்று ஆகிவிடாது. மாடர்ன் சயின்ஸ் அரைவேக்காடு என்பதும், நம் பாரம்பரிய அறிவியலை விட பின்தங்கியது என்றும் அந்தந்த துறை வல்லுனர்களே என்றோ ஒப்புக்கொண்ட உண்மையும் கூட. சமூக-அரசியல் சூழலில் சிக்கிக்கொண்டதால் நமக்கிந்த நிலை. இதற்கு காரணம், நம் கையில் இருக்கும் கல்வி/அளவுகோல் அப்படி. தற்கால அறிவியலை கொண்டுதான் நாம் எதையும் ஒப்பிட்டு உணர்ந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. "தெரியாத தேவதையை விட தெரிந்த பேயே மேல்" என்னும் மனோபாவம். நம் பாரம்பரிய அறிவுச்சுரங்கம் பற்றிய நம் அறியாமை, நம் மீதே நமக்கிருக்கும் தாழ்வு மனப்பான்மை போன்றவையே இதுபோன்ற மனநிலைக்கு காரணம். இந்த மனநிலையில் இருப்பவர்களுக்கு தரம்பால் புத்தகங்களையும், இன்பினிட்டி பவுண்டேசன் ஆய்வு கட்டுரைகளையும் பரிந்துரைப்பேன்.

எனக்கு, தற்கால நவீன அறிவியல் கூறுகளுக்கு நம் புராதன நூல்கள், சித்தர் பாடல்கள் போன்றவற்றில் மேற்கோள் காட்டினால் நம்பிக்கை கூடுகிறது. தற்கால அறிவியலால் புரோகிராம் செய்யப்பட்டுள்ளதால் சயின்டிபிக் விளக்கங்கள் புரிந்துகொள்ள துணை செய்கிறதேயன்றி நம்பகத்தன்மை என்ற அளவில் எனக்கு தேவைப்படுவது இல்லை.

Friday 25 July 2014

திருட்டு விசிடி

திருட்டு விசிடியில் சினிமா பார்க்காதீர்கள் என்று சொல்லுவோருக்கு.. நீங்கள் என்றாவது சினிமாவில் சமூகத்தை கெடுக்கும் சாராயம், புகை, ஆபாசம், காதல், வன்முறை, பெற்றோரை-கிராமத்தவனை-குடும்பங்களை-உறவுகளை கொச்சைப்படுத்தி மேற்குமய வாழ்க்கை முறைக்கு ஜால்ரா தட்டும்-சகஜப்படுத்தும் கருத்துக்களை பரப்பாதீர்கள் என்று சொன்னதுண்டா..?? அதில் நடிக்க மறுத்ததுண்டா? இன்று சாமானியன் குடும்பத்தோடு சினிமாவுக்கு போய்வர ரூ.1,000 செலவு செய்ய வேண்டும். அவனை பற்றி என்றாவது யோசித்ததுண்டா..?? நீங்கள் உங்கள் ஹீரோக்களின் சம்பளத்தை குறைக்கச்சொல்லியோ-சினிமா லாப அடிப்படையில் சம்பளம் என்றோ ஒப்பந்தம் செய்து கொள்ள முயற்சித்ததுண்டா..?? சமூகத்தை கெடுப்பதை பற்றி அக்கறையே இல்லாமல் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் உங்கள் வருமானத்தை காக்க காலில் கூட விழும் நீங்கள், சாமானியன் சில நூறுகளை மிச்சப்படுத்த விசிடி பார்ப்பதை வேண்டாம் என்று சொல்ல என்ன முகாந்திரம் உள்ளது?? அதர்மத்தை பரப்பும் நீங்கள் மக்களிடம் தர்மத்தை எப்படி எதிர்பார்க்கிறீர்கள்..??

என் கருத்து, தற்கால சினிமாக்களை புறக்கணிப்பதே சிறந்தது. தியேட்டர் என்ன, விசிடி என்ன..? விஷம் விஷம் தான்.. மிக மிக சொற்பமான அளவில் உள்ள, மேற்சொன்ன வரிகளுக்கு பொருந்தாதவர்கள் விதிவிலக்கு..

விநாயகர்

அவசர வேலை வந்தால், நாம் சமரசம் செய்து கொள்வது நமது பூஜை நேரத்தைத்தான்.. இன்று நானும் அதுபோல கிளம்பவேண்டிய சூழல், எனவே சூரியனை கும்பிட்டுவிட்டு டாக்ஸி பிடிக்க ஓடிவிட்டேன். டாக்ஸியில் விநாயர் சிலை பூ-அருகம்புல்லுடன் இருந்தது. ஆர்வத்தோடு கேட்க, டாக்ஸி ஓட்டிய தாய்லாந்து நாட்டு டிரைவர் தான் கணேஷா பக்தர் என்றும் தினசரி டாக்ஸி எடுக்கும்முன் நீர்விட்டு பூ, அருகம்புல் வைத்து கும்பிட்டபின் தான் வேலையை ஆரம்பிப்பேன் என்றும்; வாராவாரம் விநாயகர் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து, ஒன்பது முறை வலம் வருவேன் என்றும்; கணேசனை கும்பிட துவங்கிய பின்னர் அவரது குடும்ப பிரச்சனைகள் தீர்ந்தது என்றும் சிலாகித்து சொன்னார். எனவே என்னையும் கணேசனை வழிபடச்சொல்லி அறிவுறுத்தினார். வீட்டில் இதைவிட பெரிய விநாயகர் சிலை வைத்து கும்பிடுகிறாராம். வருடம் ஒருமுறை தாய்லாந்தில் இருக்கும் விநாயகர் கோயிலுக்கு வருடம் ஒரு முறை சென்று வருவாராம். சீன மொழியில் விநாயகர் மந்திரங்கள் கூட சொல்லுவாராம்.

எப்படியோ, காலையில் நமக்கும் தரிசனம் கிடைத்தது என்று திருப்தி.


சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் தீவிரமடைந்து, கிட்னி பாதிக்கப்பட்டு, சென்னை மற்றும் பெங்களூர் மருத்துவர்கள் கைவிட்டு, வீட்டுக்கு கொண்டு செல்லச் சொல்லிய பின்னர், ஒருவர் இயற்கை வைத்திய முறையில் பத்தியம், சில வேர்கள் உண்டு பின்னர் நெருஞ்சி முள் ஜூஸ் குடித்து இன்று சர்க்கரை நோயில் இருந்து பூரண குணமடைந்துவிட்டார். எந்த மாத்திரையோ பத்தியமோ இல்லை. எலும்பும் தோலுமாக இருந்தவர் இன்று வாட்டசாட்டமான மனிதராகிவிட்டார். இயற்கை வைத்திய வெற்றி பல இடங்களிலும் இதுபோல அரங்கேறி வருகிறது. இன்றோ நாளையோ அவரிடம் பேசி தகவல்களை சொல்கிறேன்.

சமஸ்கிருதம்

சமஸ்கிருதம் பழமையான மொழி. பல்வேறு அரிய நூல்கள் இயற்றப்பட்ட மொழி. இன்று உள்ள பல மொழிகளின் மூல சொற்களை தன்னகத்தே கொண்டிருக்கும் மொழி. பல நூற்றாண்டுகளுக்கு முன், உலகின் தொண்மை மிகு கல்வி நிலையங்களில் பயிற்று மொழியாக இருந்த மொழி. நாசாவும் கூட விரும்பும் மொழி ( நம் சொத்தின் மேன்மையை உணர்த்தவும் வெள்ளைகார துரைமார்கள் அங்கீகாரம் வேண்டுமல்லவா). இன்று பொலிவற்று இருக்கும் இம்மொழியை, அம்பேத்கர் சொன்னது போல் தேசிய மொழியாக்கி வளர்க்க வேண்டாம்; குறைந்தபட்சம் அதை பற்றிய விழிப்புணர்வு கொண்டுவருவதில் தவறேதும் இல்லையே. நம் தேசத்தின் பாரம்பரிய மொழிகளில் ஒன்று மீண்டு வந்துவிடக்கூடாது என்பதில் என்ன முனைப்பு? சமஸ்கிருதத்தை குப்பை என்று சொல்வோர்-பள்ளியில் கற்பிக்கப்படும் மெக்காலே குப்பையை என்னவென்று சொல்வீர்கள்?? ஒரு காலத்தில் ஹீப்ரு கூட செத்த மொழிதான்; இன்று ஒரு நாட்டின் தேசிய மொழி என்னும் அளவையும் தாண்டி வளர்க்கப்பட்டுள்ளது.

இதில் திணிப்போ கட்டாயமோ இல்லாதபோது ஏன் எதிர்க்க வேண்டும்?

பெண்கள்-குடும்பம்

வலுவான குடும்பம்-வளமான இந்தியா: நல்ல புத்தகம். குடும்ப அமைப்பு, சமூகத்துக்கும், மனிதர்களுக்கும், தேசத்துக்கும் ஏன் முக்கியமானது, குடும்பங்கள் வலுவாக இருக்கும் தேசங்கள் குடும்ப முறை சுருங்கும் தேசங்கள் அவற்றின் பொருளாதாரம் மனித வாழ்வு போன்றவற்றை தக்க ஆதாரங்களோடு விவரித்துள்ளார் ஆசிரியர். குடும்பங்களின் ஆதார சக்தியான பெண்கள் அவர்களின் பங்களிப்பு குறித்தும் பேசியுள்ளார். பெண்ணியம் என்ற பேரில், அற்ப காரணங்களுக்காக தனது சொந்த குடும்பத்தையே தனது எதிரியாக சிந்திக்கவைத்து குடும்ப அமைப்பை சுமையாக கருத செய்கிறார்கள். இதன்மூலம் நாட்டை குடும்பங்கள் நிறைந்த வாழ்விடமாக அல்லாமல், நுகர்வோர்களின், சந்தையாகவும், பணியாளர்களின் காலனியாகவும் மாற்றி வைக்கப்பார்க்கிறார்கள் என்ற தகவலும் புரிய வரும்.

நம்ம பொண்ணுங்க என்ன லேசுபட்டவர்களா..??

HF காளை இறக்குமதி

ஜல்லிக்கட்டு வணிகமயாகிவிட்டது என்றும் அது மீண்டும் கிராம ஆன்மீக விழாவாக கொண்டாடும் சூழல் உருவாக்கவேண்டும் என்று ஜல்லிக்கட்டு தடையை ஆதரித்தவர்கள் எழுதினார்கள். காளைகள் சாமானிய கிராமத்து மக்கள் கைகளில் இருந்து பிடுங்கப்பட்ட பின்பு எப்படி சாத்தியமாக்குவார் என்று கேட்டு கொண்டேன். அதற்கு நேற்று விடை கிடைத்தது.டெய்ரி டெவலப்மன்ட் போர்டு 80 டென்மார்க்கின் HF ரக காளைகளை இறக்குமதி செய்யப்போகிறதாம். தரம் தாழ்ந்த (!!) நம் நாட்டு பசு இனங்களின் மீட்பராக சீமை காளைகள் வருகிறது. இதுக்கு மேதாவிங்க வச்ச பேர் Breed Improvement (Article 48). வந்தனா சிவா மொழியில் இது Genetic Pollution!. வருங்காலத்தில் திமிலில்லா HF காளைகளை வீரர்கள் எப்படி அணுகுவார்கள்?. இந்த சீமைமாட்டு பாலை குடித்து வளரும் பயில்வான்களுக்கு சீமை காளை கன்றுகளை அடக்கினாலே பெரிய விஷயம்தான். ஒருபக்கம் மேற்கத்திய அமைப்புக்கள் துணையோடு ஜல்லிக்கட்டு தடை; தொடர்ந்து காளைகள் வெட்டுக்கு கேரளா பயணம்; மறுபக்கம் பிடிவாதமாக காளைகள் வைத்திருப்பவர்களிடம் கிறிஸ்தவ மிஷனரிகள் அழுத்தமான பேரம்; இன்னொருபுறம் சீமை காளைகள் இறக்குமதி. புள்ளிகளை இணைக்க மாட்டேன் என்று அடம்பிடிக்க போவதில்லை. ஆடி மாச காத்திலும் ஆங்காங்கே அணையா அகல்விளக்குகள் நம்பிக்கை வெளிச்சம் தருகின்றன.

நல்ல தருணங்கள்

கஷ்டமான காலங்களில் பல நல்ல நினைவுகள்தான் நம்மை சுலபமாக மீட்டுக்கொடுக்கும்.. அறிமுகமற்றவர்கள் சொல்லும் வாழ்த்துக்கள், தாய்மாமா போல நம் மனத்துக்கு நெருக்கமான உறவுகளோடு கழித்த தருணங்கள், பெரியவர்கள் அகமகிழ்ந்து சொல்லும் ஆசிகள், நமக்கு முதல் குழந்தையான நம் சகோதரி குழந்தைகளோடு செலவழித்த தருணங்கள்,ஒரு சிலரின் நல்வாழ்வுக்காவது நாம் காரணமாக அமைவது, வீட்டிற்கும் ஊருக்கும் நாம் ஆக்கப்பூர்வமாக செய்த வேலைகள், நாம் வளர்த்து பலன் கொடுக்கும் மரங்கள், பசுக்கள், நீர்நிலைகள் மற்றும் பொது அமைப்புக்கள், சில வெற்றித்தருணங்கள், நம்மையே சிரிக்கச்செய்யும் சில அபத்தமான மனநிலைகள், நாம் விரும்பும் சூழலில் கழித்த தருணங்கள், பள்ளி நாட்கள் மற்றும் நல்ல நண்பர்களோடான உரையாடல்கள்.. இவையெல்லாம்தான் நம் வாழ்வை அர்த்தப்படுத்தவும் செய்யும்..

வேட்டி-ஜல்லிக்கட்டு

வேட்டி கட்ட தடை என்றதும் பொங்கிய முற்போக்குகளே.. சந்தோசம்.. அதே சமயம், ஜல்லிக்கட்டை தடை செய்தபோது என்ன செய்தீர்கள்..? ரேக்ளா, ஜல்லிக்கட்டு இந்த மண்ணின் கலாசாரம் இல்லையா? புறத்திணைகளுள் ஒன்றாக கடத்தப்படும் பசுக்களை மீட்பதை சங்க இலக்கியங்கள் கூறுகின்றன; அப்படி மீட்டவர்களுக்கு வீரக்கல் எடுத்து கொண்டாடியது தேசம் முழுக்க நடந்துள்ளது. எத்தனை பேர் பசுக்கடத்தலை தடுத்து கலாசாரத்தை காப்பாற்றினீர்கள்?? எத்தனை பேர் உங்கள் இல்ல கல்யாணங்களில் கோட் சூட் போடாமல் இருந்தீர்கள், பப்பே உணவு போடாமல் நீங்களே பரிமாரிணீர்கள்? குறைந்தபட்சம் பப்பே விருந்தில் கலந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? கிளப்புகள், பப்புகள் நம்ம கலாசாராமா? சரி, எப்படியோ குறைந்தபட்சம் வேட்டிக்காவது அரசியல்வாதிகள் குரல் கொடுப்பது மகிழ்ச்சி..

நமது டிராப்பிக்கல் கிளைமேட் கு வேட்டிதான் சரியா இருக்கும். வேட்டி என்றால் கைத்தறி வேட்டியை பயன்படுத்துவதே சிறப்பு. அதற்கு தேவைப்படும் மறைநீர் (Virtual water) வெறும் முப்பதே லிட்டர். மொட மொட வென இருக்கும் பிராண்டட் வேட்டிகள் மோசமானவை. இயற்கை ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொண்டு சிலர் வருவார்கள். வருஷத்தில் ஒரு நாள், ஐநூறு கிலோமீட்டர் காரில் வந்து, நாலு செடியை நெட்டு நாலு பிளாஸ்டிக் பேப்பரை பொறுக்குவார்கள் (போட்டோ எடுக்க). அதற்கு அவர்கள் பிரத்யேகமாக ஜீன்ஸ் டீ ஷர்ட் வாங்கி போட்டு வருவார்கள்.

"அடேய்! ஒரு ஜீன்ஸ் தயாரிக்க 4,000 லிட்டர் தண்ணீ வெஷமாகுது டா.. ஒரு டீ ஷர்ட் தயாரிக்க 500 லிட்டர் தண்ணீ வெஷமாகுதுடா.. நிலத்தடி நீர், விவசாய பொருட்கள், மண், மனிதர்கள், நீர்-நில உயிரினங்கள் அனைத்தும் பாதிக்கும் டா.. கறக்கறது காப்படி; ஒதைக்கறது பல்லுப்போவ னு சொல்ற மாதிரி இருக்குது.. உங்க சேவையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம், ஓடுங்கடா" என்று விரட்ட தோணும்.

தரம்பால்-பேட்டி

காந்தியவாதி. வரலாற்றாய்வாளர்.பியூட்டிஃபுல் ட்ரீ (18-ம் நூற்றண்டில் இந்திய கல்வி), பதினெட்டாம்நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும்தொழில்நுட்பமும் போன்ற நூல்களை எழுதியவர். உத்தரபிரதேசத்தில் முஸாஃபர்நகர் மாவட்டத்தில் காந்தளா கிராமத்தில் 1922-ல் பிறந்தவர்.
இந்திய சமூகம் குறித்து பிரிட்டிஷார் நமக்குப் பிழையாக உருவாக்கித் தந்த பல்வேறு கருத்தாக்கங்களை பிரிட்டிஷாரின் ஆவணங்களை வைத்தே தகர்த்தவர். டெக்கான் ஹெரால்டு இதழில் 1983-ல் வெளியான பேட்டியின் ஒரு பகுதி அவருடைய நினைவுநாளை ஒட்டி (அக், 24) இங்கு மறு பிரசுரம் செய்யப்படுகிறது. பேட்டி எடுத்தவர் ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன்.
ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன்நீங்கள் பிரிட்டிஷாருக்கு முந்தைய இந்திய சமூகம்குறித்துகுறிப்பாக 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி இந்திய சமூக வாழ்க்கைசம்பந்தமாகஅதிக ஆர்வத்துடன் இருக்கிறீர்களே… ஏன் என்று சொல்ல முடியுமா?எதற்காகக் கேட்கிறேன் என்றால் நீங்கள்ஆய்வுப் பணிகளை தன்னார்வத்தின்அடிப்படையில் மேற்கொண்டவர்தான்நீங்கள் ஓர் அதிகாரபூர்வ கல்விப்புலம்சார்ந்த பண்டிதரோ ஆய்வாளரோ கிடையாது.
தரம்பால்: நான் அதிகாரபூர்வ ஆய்வுப் பணியாளன் அல்லதான். ஆனால், நான் ஒரு களப்பணியாளன். கிராமப்புற மேம்பாடு தொடர்பான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பில் நீண்ட காலம் பணிபுரிந்திருக்கிறேன். (AVARD- Associaion of Volountary Agencies for Rural Development.) 1958-ல் இருந்து 1964 வரை அதன் செகரட்டரியாக இருந்திருக்கிறேன். நம் தேசத்தில் பஞ்சாயத்துகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை விரிவாக ஆராய்ச்சி செய்த அமைப்பு அது.
அந்த நிறுவனத்தில் பணி புரிந்தபோது எனக்கு ஓர் எளிய உண்மை தெரியவந்தது. அதாவது நமது இந்திய சமூகம் பெரும்பாலும் பாரம்பரிய மதிப்பீடுகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே செயல்பட்டுவருகிறது. ஆரம்பத்தில் பெரும்பாலான ‘வெளிப்புற பார்வை’ கொண்ட  இந்தியர்களைப் போலவே எனக்கும் நம் மண் சார்ந்த வாழ்க்கை முறை பற்றி எதுவும் தெரியாமல்தான் இருந்தது.
ஓர் உதாரணம் சொல்கிறேன். பஞ்சாயத்துகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பார்க்க ராஜஸ்தானில் இருந்த ஒரு கிராமத்துக்குப் போயிருந்தேன். அங்கு புதிதாக ஒரு கட்டடம் கட்டப்பட்டிருந்தது. அந்த பஞ்சாயத்தின் அதிகாரபூர்வ ஆவணங்களைப் பரிசோதித்துப் பார்த்தபோது அந்தக் கட்டடம் பற்றி எந்தக் குறிப்பும் இடம்பெற்றிருக்கவில்லை. என்ன விஷயம் என்று அவர்களைக் கேட்டேன். பீஸ் பிஸ்வ பஞ்சாயத் (இருபது அங்க பஞ்சாயத்து) என்ற பாரம்பரிய அமைப்பின் சார்பில் அதைக் கட்டியதாகச் சொன்னார்கள். அது ஓர் அதிகாரபூர்வமற்ற அமைப்பு. கால காலமாக அந்த கிராமங்களில் அப்படியான ஓர் அமைப்பின் மூலம்தான் பணிகள் நடந்து வந்திருக்கின்றன. அது அதிகாரபூர்வ பஞ்சாயத்தைவிட செயல் ஊக்கம் மிகுந்ததாகவும் மக்களின் அதிக பிரதிநிதித்துவத்தைப் பெற்றதாகவும் இருந்தது.
ஆந்திரா, தமிழகம் போன்ற பிற பல இடங்களிலும் இது போன்ற அனுபவமே எனக்குக் கிடைத்தது. 1963-65 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பஞ்சாயத்து அமைப்பு எப்படிச் செயல்படுகிறது என்பதை விரிவாக ஆராய்ச்சி செய்தோம். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்குப் போனேன். பஞ்சாயத்துத் தலைவர்களிடம் கலந்துரையாடினேன். வேறு பலரிடம் பேசினேன். தஞ்சாவூரில் பாரத சேவக் சமாஜ் என்ற அமைப்பின் சேர்மனைப் பார்த்துப் பேசினேன். 100-க்கு மேற்பட்ட கிராம சமுதாயங்கள் 1937 வாக்கில் தஞ்சைப் பகுதியில் இருந்ததாக அவர் சொன்னார். அதாவது கிராம சமுதாயம் என்றால், ஒட்டு மொத்த நிலமும் கிராம சமுதாயத்துக்கே சொந்தமாக இருக்கும். கிராமத்து உறுப்பினர்கள் அவரவருக்கான குறிப்பிட்ட பங்கு நிலத்தில் பயிர் செய்து விளைச்சலை எடுத்துக் கொள்வார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் நிலமானது கிராமத்தினர் அனைவருக்கும் இடையில் பரிமாற்றம் செய்துகொள்ளப்படும். ஏனென்றால், காலப்போக்கில் நிலத்தின் வளத்தில் மாற்றம் ஏற்படுவது இயற்கைதானே. ஒருவருக்கு மட்டுமே நல்ல நிலம் கிடைத்து மற்றவருக்கு வளம் குறைந்த நிலம் கிடைத்துவிட்டால் ஒருவித ஏற்றத் தாழ்வும் நியாயமின்மையும் உருவாகிவிடுமென்பதால் அப்படி அவ்வப்போது நிலத்தைப் பரிமாற்றிக் கொள்வார்களாம்.
பிரிட்டிஷாரின் வருவாய்த்துறை மற்றும் பிற துறை ஆவணங்களைப் பார்த்தபோது 1807 வாக்கில் தஞ்சையில் இருந்த நிலத்தில் 30 சதவிகிதம் கிராம சமுதாய நிலங்களாக இருந்தது தெரியவந்தது. 18-ம் நூற்றாண்டு, 19-ம் நூற்றாண்டு ஆவணங்களை நான் தீவிரமாக ஆராயத் தொடங்கியபோது இன்று நாம் நமது இந்திய சமுதாயம் பற்றி உருவாக்கிக் கொண்டிருக்கும் சித்திரம் தவறு என்பது தெரியவந்தது. யாராவது ஒருவர் 18-ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் ஆவணங்களை விரிவாகப் பார்த்தாக வேண்டியிருந்தது. எனவே, என்னால் முடிந்தவற்றைச் செய்ய ஆரம்பித்தேன்.
வேறொரு கேள்வி கேட்கிறேன்நம் தேசத்தை ஆங்கிலேயர்களால் எப்படி எளிதில்அடிமைப்படுத்த முடிந்ததுஇந்தியாவில் இருந்த எந்த அம்சங்கள் இதற்குக்காரணமாக இருந்தன?
ஒரு விஷயத்தை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். பிரிட்டிஷ் காலத்துக்கு முந்தைய இந்திய சமூகத்தின் பலம், பலவீனம் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. 18-ம் நூற்றாண்டின் பிந்தைய பகுதி இந்தியா பற்றி, அதுவும் பிரிட்டிஷாரின் ஆவணங்களை அடிப்படையாகக்கொண்ட  தகவல்கள், மட்டுமே எனக்குத் தெரியும். பிரிட்டிஷாருக்கு முந்தைய இந்தியா பற்றி பதில் சொல்ல ஒருவருக்கு வேறு பல விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
ஆனால், ஒரு விஷயத்தை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். 1700 வாக்கில் முகலாயர்களின் மைய அரசு பலவீனமடைய ஆரம்பித்திருந்தது. அதைத் தொடர்ந்து வந்த காலகட்டத்தில் மிகப் பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ளூர் அரசர்கள் தங்கள் உரிமைக்காகப் போராட ஆரம்பித்திருந்தனர். இந்த அரசியல் மாற்றம் மிகவும் மெதுவாகவும் பலவீனமாகவும் இருந்தது. பிரிட்டிஷ், ஃப்ரான்ஸ் போன்ற ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு முன்னால் இந்திய சிற்றரசர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பிரிட்டிஷார் படிப்படியாக ஒவ்வொரு பகுதியாகக் கைப்பற்றி இந்த தேசத்தை வென்றெடுத்தபோது அதற்கு எதிராக ஒற்றுமையாகப் போராட வழியில்லாமல் போய்விட்டது.
இந்திய நிலப்பிரபுத்துவத்தால் புதிதாகப் பிறந்திருந்த மேற்கத்திய முதலாளித்துவசமூக அமைப்பை எதிர்க்க முடியாமல் போய்விட்டது என்று சொல்லலாமா?
நம்மிடம் நிலபிரபுத்துவம் இருந்தாதா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் இது போன்ற முத்திரை குத்தல்களுக்குப் பின்னால் பல்வேறு அர்த்தங்கள், அனுமானங்கள் மறைந்து காணப்படுகின்றன. உதாரணமாக, முகலாயர்களின் மையப்படுத்தப்பட்ட அரசு என்று நாம் சொல்லும்போது அது மிகவும் வலுவான மையப்படுத்தப்பட்ட அரசு என்பது போன்ற தோற்றம் நமக்கு ஏற்படும். ஆனால், அது உண்மை அல்ல. அவுரங்கஸீப் தன் பேரனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதம் இரண்டு விஷயங்களைச் சுட்டிக்காட்டுகிறது: ஜஹாங்கீரின் காலகட்டத்தில் அரசு வருவாய் 60 லட்சம். செலவோ ஒன்றரைக் கோடி. அந்தப் பற்றாக்குறையை அக்பர் சேர்த்து வைத்திருந்த செல்வத்தில் இருந்து எடுத்து சரிக்கட்டியிருக்கிறார்கள்.
இரண்டாவதாக, ஜஹாங்கீருக்கு அடுத்ததாக வந்த ஷாஜஹான் வருவாயை ஒன்றரைக் கோடியாக உயர்த்தினார். செலவினத்தை ஒரு கோடியாகக் குறைத்தார். ஆனால், மொகலாயர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவின் மொத்த வருமானம் 10-20 கோடிவரை இருந்திருக்கலாமென்று கணிக்கப்பட்டுள்ளது.அதில் சொற்ப அளவே மன்னருக்கு வரியாகக் கிடைத்திருக்கிறதென்றால், எஞ்சிய பணம் எங்கே போனது? அவுரங்கஸீப்பின் காலகட்டத்தில்கூட மன்னரின் வரி வருவாய் 20%த்தைக்கூடத் தாண்டவில்லை என்பதை அனைத்து சரித்திர ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்டுதான் இருக்கிறார்கள். எஞ்சிய 80 சதவிகிதம் அந்தந்தப் பகுதிக்குள்ளாகவே செலவிடப்பட்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது.
பணியாளர்களுக்கான சம்பளம் போக எஞ்சிய பணமானது சத்திரங்கள் நடத்துதல், பள்ளிகள், குளங்கள், ஏரிகளை நிர்வகித்தல், கோயில் போன்ற நிறுவனங்களுக்கான நன்கொடை, அறிஞர்கள், கவிஞர்கள், மருத்துவர்கள், ஜோதிடர்கள், மந்திரவாதிகள்போன்றோருக்கான சன்மானங்கள் என காலகாலமாக பின்பற்றுவந்த விஷயங்களுக்காகச் செலவிடப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். மொகலாயர்கள் காலகட்டத்திலும் பின்பற்றப்பட்டு வந்த இந்த விஷயம் பிரிட்டிஷாரின் வருகையைத் தொடர்ந்து மாறியது. பிரிட்டிஷார் 50-60% வரி வசூலிக்க ஆரம்பித்தனர். இதனால் ஏற்பட்ட பின்விளைவுகளை ஒருவர் எளிதில் புரிந்து கொள்ள முடியும். கிராமத்தினரிடமிருந்து பெரும்பகுதி இப்படி அரசால் பிடுங்கப்பட்டதால் சத்திரங்கள், பள்ளிகள், குளங்கள் இவற்றின் நிர்வாகத்துக்கு பெரும் இடைஞ்சல் வந்தது.
பிரிட்டிஷார் இதைத் திட்டமிட்டு செய்ததாகச் சொல்கிறீர்களா?
பிரிட்டிஷார் தங்களுக்குப் பழக்கமான ஒரு செயலைச் செய்தார்கள். இங்கிலாந்தில் விவசாயிகளிடமிருந்து 50%க்கு மேலாக வரி வசூலிக்கப்பட்டது. இந்தியாவை அடிமைப்படுத்திய பிறகு அதுபோலவே இங்கும் வசூலித்தார்கள். இந்தியாவுக்கு என்று தனியாக எதையும் புகுத்தியிருக்கவில்லை. எங்கெல்லாம் போனார்களோ அங்கெல்லாம் இதையேதான் செய்தார்கள். ஏனென்றால், மையப்படுத்தப்பட்டு வலுவான அரசு என்பதுதான் அவர்களுடைய கோட்பாடு. இதற்கான வேர்கள் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே இருக்கிறது. முதலாளித்துவத்தின் வருகைதான் காரணம் என்று சொல்ல முடியாது. உதாரணமாக, பொது சகாப்தம் 1100-ல் நார்மன் வெற்றிக்குப் பிறகு இங்கிலாந்தின் 95% வளங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு வெற்றியாளர்களால் அதாவது அரசராலும் தேவாலயங்களாலும் புதிய நிலப்பிரபுக்களாலும் பகிர்ந்துகொள்ளப்பட்டது.
1750 அல்லது அதற்கு முந்தைய இந்தியாவானது இங்கிலாந்தைவிட மேலானதாகஇருந்திருக்கிறதாஇந்தியாவில் சாதாரண மனிதரின் நிலை என்னவாகஇருந்திருக்கிறது?
நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களை மட்டுமே வைத்து இரண்டு சமூகங்களையும் முழுமையாக ஒப்பிட முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், இந்திய சமூகம் பற்றிய மாறுபட்ட சித்திரத்தை அவற்றின் மூலம் நிச்சயம் புரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, 1804 ஜூலை மாதத்தில் எடின்பர்க் ரிவ்யூவில் இந்தியாவில் விவசாய உற்பத்தி பற்றியும் சம்பளங்கள் பற்றியும் கலந்துரையாடியிருக்கிறார்கள். இங்கிலாந்துடன் ஒப்பிட்டுப் பார்த்ததில் இந்தியாவின் விவசாய உற்பத்தி பல மடங்கு அதிகமாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷாரை மேலும் ஆச்சரியப்படுத்திய விஷயம் என்னவென்றால், இந்திய விவசாயத் தொழிலாளர்களின் சம்பளம் பிரிட்டிஷ் தொழிலாளரின் சம்பளத்தைவிட கணிசமாக அதிகமாகவே இருந்திருக்கிறது.
அதிலும் இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்த அந்தக் காலகட்டத்திலேயே சம்பளம் இவ்வளவு அதிகமாக இருக்கிறது என்றால் அது நல்ல நிலையில் இருந்தபோது இன்னும் எவ்வளவு அதிகமாக இருந்திருக்கும் என்று ஆச்சரியப்பட்டுக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
1806 வாக்கில் பெல்லாரி மாவட்டத்தில் உணவு உட்கொள்ளும் விகிதம் (கன்சம்ஷன்) பற்றி ஆராய்ந்து பார்த்திருக்கிறார்கள். தேசத்தின் ஒட்டு மொத்த உட்கொள்ளலை அளவிட்டதோடு மக்களை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தி ஆராய்ந்திருக்கிறார்கள். இந்த வகைப்பாடு பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டதுதான். மூன்று தரப்பு மக்களும் உட்கொண்ட உணவின் அளவு கிட்டத்தட்ட சமமாகவே இருந்திருக்கிறது. அதாவது ஒரு நபருக்கு நாளொன்றுக்கு சுமார் ஒரு கிலோ உணவு. பயறு வகைகள், நெய், எண்ணெய், தேங்காய், காய் கனிகள், வெத்தலை என மொத்தம் 23 வகைகள் பரவலான பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. மொத்த வருடாந்திர தனி நபர் உட்கொள்ளல் (பெர் கேப்பிடா கன்சம்ஷன்) முதல் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 17 ரூபாயாகவும் இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 9 ரூபாயாகவும் மூன்றாம் பிரிவினருக்கு 7 ரூபாயாகவும் இருந்திருக்கிறது.
தஞ்சாவூரில் 1805-ல் மிராசுதார்களின் (நில உடமையாளர்களின்) எண்ணிக்கை 62,000. அதில் 42,000 பேர் சூத்ரர்கள் மற்றும் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஜாதியினராக இருந்திருக்கிறார்கள். சேலம் மாவட்டத்தில், நில உடமையாளர்களாக இருந்த பறையர்களின் எண்ணிக்கை 32,474 ஆக இருந்திருக்கிறது. 1799-ல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த மொத்த மிராசுதார்களின் எண்ணிக்கை 8300 என்று கலெக்டர் பட்டியலிட்டிருக்கிறார். ஆனால், உண்மையில் அவர்களுடைய எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். 18-ம் நூற்றாண்டின் பிந்தைய காலகட்டத்து பிரிட்டிஷாரின் ஆவணங்களை இன்னும் ஆழமாக ஒருவர் ஆராய்ந்து பார்த்தால் இந்திய சமூகம் பற்றிய விரிவான முற்றிலும் மாறுபட்ட சித்திரம் நமக்குக் கிடைக்கும்.
உதாரணமாக, மதராஸ் வருவாய் திட்டத்தை உருவாக்கிய அலெக்சாண்டர் ரீட் சொல்கிறார்: 1780 வாக்கில் ஹைதராபாத்தில் இருந்த பிரபுக்களுக்கும் பணியாளர்களுக்கும் இடையில் இருந்த வேறுபாடு என்று பார்த்தால் முன்னவருடைய ஆடை கொஞ்சம் கூடுதல் தூய்மையாக இருந்தது… அவ்வளவுதான்.
பிரிட்டிஷாருக்கு முன்னால் இந்தியாவில் கல்வி பற்றிய உங்களுடைய அடுத்தபுத்தகத்தில் பல சுவாரசியமான அம்சங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆமாம். உதாரணமாக 1922-25 வாக்கில் மதராஸ் பிரஸிடென்ஸியில் இந்திய பாரம்பரியக் கல்விமுறை பற்றிய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 11,575 பள்ளிகளும் 1094 உயர் கல்வி மையங்களும் மதராஸ் பிரஸிடென்ஸியில் நடைபெற்றுவந்தது தெரியவந்தது. இந்த ஆய்வில் இருந்து தெரிய வந்த இன்னொரு முக்கியமான அம்சம் ஜாதி ரீதியிலான பிரதிநிதித்துவம் பற்றியதுதான்.
தமிழ்நாட்டில் மொத்த மாணவர்களில் 70-80 சதவிகிதம் பேர் சூத்ர மற்றும் அதற்கு அடுத்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். ஒரிஸ்ஸாவில் இவர்களின் எண்ணிக்கை 62 சதவிகிதமாகவும் கேரளாவில் 54 சதவிகிதமாகவும் தெலுங்கு மொழி பேசப்படும் இடங்களில் 35-40 சதவிகிதமாகவும் இருந்திருந்தது தெரிய வந்தது. கேரளாவில் கல்வி கற்றவர்களில் மாணவர்களின் எண்ணிக்கை 3,196. மாணவிகளின் எண்ணிக்கை 1,122 யாக இருந்திருக்கிறது. எனது பியூட்டிஃபுல் ட்ரீ புத்தகத்தில் பிரிட்டிஷாரின் விரிவான ஆவணங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறேன். அதை படித்துப் பார்க்கும் ஒருவர் பிரிட்டிஷாருக்கு முந்தைய காலகட்டத்து இந்தியாவில் கல்வி எப்படி இருந்தது என்பது பற்றிய தன் எண்ணங்கள் அனைத்தையும் மாற்றிக் கொண்டேயாக வேண்டியிருக்கும்.
இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் எந்த நிலையில் இருந்தது?
வான சாஸ்திரம், கணிதம் ஆகிய இரண்டையும் எடுத்துக் கொள்ளுங்கள். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் உறுப்பினராகவும் வங்காளத்தின் கமாண்டர் இன் சீஃப் ஆகவும் இருந்த சர் ராபர்ட் பார்கர், காசியில் இருந்த புகழ் பெற்ற கோளரங்கத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவில்கூட 1823 வரையில் உலகிலேமிகச் சிறந்த ஐந்து கோளரங்கங்களில் ஒன்றாக காசியில் இருந்ததும் குறிப்பிட்டிருக்கிறது. பிரபல ஃப்ரெஞ்சு வான சாஸ்திர நிபுணரான பெய்லி இந்திய வான சாஸ்திரத்தைப் பற்றி ஒரு நூல் எழுதியிருந்தார். அதை விரிவாக ஆராய்ந்து எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜான் பிளேஃபெயர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
அதே ஆண்டில் ரூபன் பரொ இந்திய பைனாமியல் கோட்பாடு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இன்றைய விஞ்ஞான வழிமுறைகள், கருவிகள் எதுவும் இல்லாமலே தமிழர்கள் கிரஹணத்தைத் துல்லியமாகக் கணிக்கிறார்கள் என்பது பற்றி கேஸினியின் உதவியாளரான லே ஜெண்டில் வியந்து எழுதியிருக்கிறார். இந்திய விவசாயத் தொழில்நுட்பங்கள் பற்றி ஏராளமான கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன.
1820 வாக்கில் கர்னல் அலெக்ஸாண்டர் வாக்கர் கேரளத்திலும் குஜராத்திலும் இருந்த விவசாய முறை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அம்மை நோய்க்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை பற்றி மருத்துவரும் வங்காளத்துக்கு சிறிது காலம் கவர்னருமாக இருந்த ஹோல்வெல் எழுதியிருக்கிறார். வங்காளத்திலும் பிற பகுதிகளிலும் அந்த சிகிச்சை பரவலாக நடைமுறையில் இருந்ததை விரிவாக குறிப்பிட்டிருக்கிறார். 1802-03 வாக்கில் இந்திய சிகிச்சை முறையை பிரிட்டிஷார் தடை செய்தனர்.
கேப்டன் ஹால்காட் தென்னிந்தியாவில் நடைமுறையில் இருந்த விதை – கலப்பை உழவு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஐரோப்பிய கண்டுபிடிப்பாகவும் மிகவும் நவீனமான ஒன்றாகவும் கருதப்பட்ட அந்த வகை உழவு இந்தியாவில் குக்கிராமங்களில்கூட பயன்பாட்டில் இருந்ததை அவரால் கற்பனைகூட செய்து பார்க்க முடிந்திருக்கவில்லை. இந்திய விதை-கலப்பையின் வடிவமைப்பு மிகவும் எளிதாகவும் செயல் திறம் மிகுந்ததாகவும் இருந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
எஃகு தயாரிப்பது தொடர்பான இந்திய வழிமுறை பற்றிய குறிப்புகளும் பிரிட்டிஷ் ஆவணங்களில் காணப்படுகின்றன. டாக்டர் ஹெலெனஸ் ஸ்காட் என்பவர் இந்திய எஃகின் சில மாதிரிகளை பிரிட்டிஷ் நிபுணர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அவர்கள் பார்த்த எஃகுகளிலேயே இந்திய எஃகு மிகவும் உயர்ந்ததாக வலிமையானதாக இருப்பதாக அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஐஸ் தயாரிப்பது, காகிதம் செய்தல், நெசவு என பல தொழில்கள் இந்தியாவில் இருந்திருக்கின்றன. சிற்ப, கட்டடக் கலையின் மேன்மை பற்றியெல்லாம் அவர்கள் தனியாக எதுவும் சொல்லத் தேவையே இல்லை.
ஆனால்இந்தியர்களை வேதனையில் உழல்பவர்களாகவும் அறியாமைநிறைந்தவர்களாகவும் பிரிட்டிஷார்கள் குறிப்பிட்டிருக்கிறார்களே
அறியாமை, துன்பம் என்று அவர்கள் சொன்னதெல்லாம் சமுதாய அல்லது பொருளாதார அர்த்தத்திலோ தொழில்நுட்பம், கலை, ரசனை இல்லாதவர்கள் என்ற அர்த்தத்திலோ அல்ல. 1813-ல் பிரிட்டிஷ் கீழ் சபையில் ஒரு விவாதம் நடந்தது. அதில் பெரும்பாலானோருக்கு, இந்தியா அப்போது குழப்பத்திலும் ஒழுங்கீனத்திலும் இருந்த போதிலும், அதன் சகிப்புத் தன்மை, ஒத்திசைவான சமூக கட்டமைப்பு, வளமை போன்ற பல்வேறு அம்சங்களில் பொறாமைப்படத் தகுந்த அளவுக்கு விழிப்பு உணர்வு பெற்றதாகவே தெரிந்திருக்கிறது. இந்திய மக்களின் ஆன்மாவை ரட்சிப்பது பற்றியே அந்த விவாதம் பெரிதும் அக்கறை கொண்டிருந்தது. அந்தக் கோணத்தை முன்னெடுத்தவர்களில் மிகவும் முக்கியமானவர் வில்லியம் வில்பர்ஃபோர்ஸ்.
கிரேக்கமும் ரோமும் கிறிஸ்தவத்தைத் தழுவுவது வரை இழிவான நிலையிலேயே இருந்தன. எனவே கிறிஸ்துவத்தை அறியாத நிலையில் இந்தியர்களால் எப்படி விழிப்பு உணர்வு பெற்றவர்களாக மகிழ்ச்சியாக இருக்க முடியும்? அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறுவதுவரை அவர்களை ஒடுக்க வேண்டும். அறியாமையில் தள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்.
அவர்களுடைய கணிப்பின்படி கிறிஸ்தவத்தைப் பற்றித் தெரியாதென்பதால், சாக்ரடீஸ், பிளேட்டோ போன்றோருமே அறியாமையில் மூழ்கியவர்களே! எனவே, அறியாமை, துன்பம் என்று பிரிட்டிஷார் இந்தியாவைப் பற்றிச் சொன்னதெல்லாம் அதன் மத அம்சத்தைப் பற்றி அவர்கள் கொண்டிருந்த அபிப்ராயத்தைத்தான் சுட்டுகிறது. உண்மையில் பார்த்தால் இந்தியாவின் சமூக, பொருளாதாரப் பின்னடைவு என்பது 1800-க்குப் பிறகு ஏற்பட்ட ஒரு நிலையே. மையப்படுத்தப்பட்ட இறுக்கமான ஓர் அரசின் உருவாக்கமும் பிரிட்டிஷாரின் சுரண்டலுமே அப்படியான ஒரு நிலைக்குக் காரணம்.
இப்படியான ஒரு அதிகாரமும் தொடர்ந்து பெருகிக் கொண்டே இருந்த சுரண்டலும் மேலும் மேலும் ஆக்கிரமிப்புகளை அதிகரிக்கப் பயன்படுத்தப்பட்டன. புதிய பெரு நகரங்கள் உருவாக்கப்பட்டன. ராணுவ குடியிருப்புகள் அதிகரிக்கப்பட்டன. பிரிட்டிஷ் பொருளாதாரத்துக்கு வலு சேர்க்கும் வகையில் எல்லா வளங்களும் சூறையாடப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன.
இந்த சீர்குலைத்தலும் வறுமைக்குள் தள்ளுதலும் அடிமைப்படுத்தலும் தங்களுடைய வருவாயைப் பாதிக்காத அளவிலேயே பிரிட்டிஷார் செயல்பட்டனர். இந்திய சமுதாயத்தை முடங்கிய நிலையில் கொண்டுபோய் நிறுத்திய பிறகு பிரிட்டிஷ் அறிஞர் பெருமக்களின் திருப்பணிகள் ஆரம்பித்தன. இந்தியாவின் வறுமையும் சீர்குலைவும் காலகாலமாகவே இருந்துவரும் ஒன்று என்று நிறுவ ஆரம்பித்தனர்.
ஜாதி அமைப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்அதுவும் 1800-க்குப் பின் வந்தபிரச்சினை என்று சொல்லமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்நம் பாரம்பரியத்தைநாம் நியாயப்படுத்திப் பேசும்போது இந்த ஜாதி விஷயம் நமக்கு நிறையபிரச்சினைகளை உருவாக்கும் என்று நினைக்கிறேன்.
நீங்கள் சொல்வது சரிதான். இந்தியாவின் இன்றைய பின்தங்கிய நிலைக்கு முக்கிய காரணமாக ஜாதியே சொல்லப்படுகிறது. ஆனால், இந்த முடிவுக்கு எப்படி வந்து சேருகிறோம்? கிராமங்களைப் போலவே ஜாதியும் இந்திய வரலாறு முழுவதும் இந்திய சமூக அமைப்பின் தவிர்க்க முடியாத அங்கமாகவே இருந்துவந்திருக்கிறது. மனுஸ்மிருதி போன்றவை இந்திய சமூகத்தை நான்கு வர்ணங்களாக வகைப்படுத்தியது உண்மைதான். ஆனால், அதற்கு முன்பிருந்தே பழங்குடிகளும் ஜாதிகளும் இந்தியாவில் இருந்து வந்திருக்கின்றன. இன்றும் இருந்து வருகின்றன. ஆனால், இந்திய வரலாற்றில் இப்போது இருப்பதுபோல் ஜாதியானது என்றைக்குமே பெரிய பிரச்சினையாக இருந்ததாகத் தெரியவில்லை.
பல்வேறு ஜாதிகள் அருகருகே வசித்து வந்திருக்கின்றன. தமக்குள் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுவந்திருக்கின்றன. ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனியான, பெருமைக்குரிய சடங்கு சம்பிரதாயங்கள் இருந்திருக்கின்றன. ஒன்றுக்கொன்று சண்டையும் இட்டும் வந்திருக்கின்றன. பொதுவாக நம்பப்படுவதற்கு முற்றிலும் மாறாக, அதாவது மனு ஸ்மிருதிக்கு முற்றிலும் எதிராக, பிரிட்டிஷார் இந்தியாவை வென்றபோது ஆட்சியில் இருந்த பெரும்பான்மையான அரசர்கள் எல்லாம் சூத்ர ஜாதியைச் சேர்ந்தவர்களே.
இந்தியாவில் தனித்தனியான ஜாதிகள் இருந்தது இந்திய அதிகாரவர்க்கத்தின் பலவீனமான நிலைக்குக் காரணமாக இருந்திருக்கலாம். அதேநேரத்தில் அந்த ஜாதி அமைப்பே இந்திய சமூகம் நீடித்து நிலைக்கவும் காரணமாக இருந்திருக்கிறது. அதன் தாக்குபிடித்தலுக்கும் மீண்டும் எழுந்து நிற்கும் வலிமைக்கும் காரணமாக இருந்திருக்கிறது. ஜாதி அமைப்பு இந்தியாவைப் பிரித்திருக்கிறதா… ஒத்திசைவுடன் இயங்க வைத்திருக்கிறதா என்பது விரிவான விவாதத்துக்கு உரியது. இன்றுவரை அதற்கு எந்த உறுதியான பதிலும் கிடைக்கவில்லை.
பிரிட்டிஷார் இந்திய ஜாதி அமைப்பைத் தீமையானது என்று சொன்னதற்கு அவர்கள் ஜாதி (குழு) அற்றதன்மையை நம்பியவர்கள் என்பதோ மேல் கீழ் கட்டுமானத்தை வெறுப்பவர்கள் என்பதோ காரணமல்ல. இந்திய சமூகத்தை அவர்கள் விரும்பியதுபோல் உடைப்பதற்கு ஜாதி தடையாக இருந்தது என்பதுதான் காரணம். இந்திய சமூகத்தை பலவீனப்படுத்தி ஒரே குடையின் கீழ்கொண்டு வந்து நிர்வாகம் செய்ய ஜாதி ஒரு தடையாக இருந்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஜாதி என்ன பங்களிப்பை ஆற்ற முடியும் என்பது வேறு விஷயம். ஆனால், நேற்றைய இந்திய சமூகத்துக்கு அது கெடுதலாக இருந்தது என்ற கருத்தாக்கம் பிரிட்டிஷாரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒன்றுதான். அது உண்மை அல்ல என்பதற்கான ஆதாரங்கள் பிரிட்டிஷாரின் ஆவணங்களிலேயே ஏராளம் இருக்கின்றன.
 மொழியாக்கம்: மகாதேவன்

மனிதனை மனிதனாக

மனிதனை மனிதனாக பார்க்காதீர்கள்.. மனிதனை ஒரு குடும்பத்தின் உறுப்பினராக, ஒரு கிராமத்தின் உறுப்பினராக பாருங்கள். கிராமங்களும், குடும்பங்களுமே தேசத்தின்-சமூகத்தின் செங்கல்கள்.. தனிமனிதர்கள் அல்ல..

தைராய்ட் கம்ளைன்ட்

போன மாசம் டாக்டர பாத்தப்ப, "உங்களுக்கு தைராய்ட் கம்ளைன்ட் வந்திருச்சு.. இனிமே நீங்க வாழ்க்க முழுக்க தைராய்ட் மாத்தர சாப்படனும்.." னு சொல்லிருக்காரு.. ஆனா, அவர் தந்த தைராய்ட் மாத்தர சாப்படாம நாட்டு மாட்டு அர்க், நாட்டு மாட்டு மோர், சூரிய வெளிச்சம், மலை காய்கறி தவிர்த்து நம்ம நாட்டு காய்கறி னு ஒரு மாசம் கடபிடிச்சு திரும்ப போய் செக் பண்ணுனா உங்களுக்கு சரியா போச்சு னு சொல்றார்..! என்னங்க னு கேட்டா "முன்னலாம் நாலு பாய்ன்ட் இருக்கற வர நார்மல்னு வரையறை சொன்னாங்க; இப்போ ரெண்டுங்கற லிமிட் நார்மல் னு சொல்றாங்க.." னு சொல்றார்..

அதெப்படி, அடிக்கடி நார்மல் விகிதம் மாறுமா..?? இவர் பேச்ச கேட்டு ஹார்மோன் அமைப்பை பாதிக்கற அந்த மாத்திரைய சாப்பிட ஆரம்பிச்சிருந்தா வங்குல சிக்குன எலி மாதிரில மாட்டிருக்கோணும்..? மருத்துவர்கள் மேல உள்ள மரியாதைய குறைக்கறதே இதுபோன்ற சம்பவங்கள்தான். சக்கரய எப்படி பணம்காய்ச்சி வியாதியா காட்டுனாங்கலோ அதுபோலதான் இதுவும்.. பாவம் அந்த டாக்டர் என்ன செய்வாரு, அவருக்கு அப்படி சொல்ல சொல்லி வற்புறுத்தப்படறார். நல்ல வேளை இப்போவாவது சொன்னாரே னு இருந்தது..

கூல்டிரிங்க்ஸ்

பெப்சி, கொக்க கோலா உட்பட இப்போதுள்ள கூல்டிரிங்க்ஸ்.. இதில் கலந்துள்ளவைகளை பாருங்கள்.. 

கபைன் (போதைப்பொருள்).. (high fructose corn syrup)வெள்ளை சக்கரை (விஷம்).. ஆப்டாய்ட் (ஓபியம் மூலக்கூறு போதைப்பொருள்)... பாஸ்பாறிக் அமிலம்.. கார்பனேட் (எலும்பையே அரிக்கும், உங்கள் வயிறு குடல் சுவர்கள் எம்மாத்திரம்??) கிளிசரின் (உணவு குறித்த உடல் அறிவை குழப்ப..) இதுக்குமேல இதுல இன்னும் என்னென்னவோ கலக்கப்படுது.. படிச்சவங்க, நீங்களே தேடி தேடி படிச்சு புரிஞ்சிக்குங்க.. 

நாட்டு மாட்டு மோர், இளநீர், பானகம், பனந்தெளுவு, கொத்தமல்லி கருப்பட்டி பானங்கள், பல்வேறு பழச்சாறுகள் போன்ற சுதேசி பானங்கள் எவ்வளவோ உண்டு.. வாய்ப்பிருப்ப்பவர்கள் அதை முயற்சி செய்துதான் பாருங்களேன்.

போதைகள்

ஓபியம் - ஹெராயின் - மார்பின் - ஆப்டாய்ட் = சீமை மாட்டு பால் - வெள்ளை சர்க்கரை - சாக்லேட் 

ஹார்மோன் சீர்கேடு, புத்தி பேதலிப்பு, சர்க்கரை நோய், இதயக்கோளாறு,ஆட்டிசம், சுவாச கோளாறு, நோய் எதிர்ப்பு பலவீனம்,,,,,,,, (எல்லையற்ற கமாக்கள்) 

வெளிநாட்டு மருந்து-மருத்துவ-உர வியாபாரம், இயற்கை சீரழிவு, நீர்வள கேடு, விவசாய சீரழிவு, மனித வளம்-மனித சக்தி இழப்பு, அறிவு இழப்பு, பண்பாட்டு சீரழிவு, பொருளாதார நாசம்,,,,, (எல்லையற்ற கமாக்கள்)

சைவம்-பரம உத்தமம்

சைவம்-பரம உத்தமம்... இருக்கும் உணவு பஞ்சத்திற்கு இருபது கிலோ தானியம் தீவனமா செலவு பண்ணி ஒரு பிளேட் கோழி சாப்பிட வேண்டுமா..? இருபது கிலோ தானியம் எத்தனை பேரின் உணவு; ஒரு பிளேட் சிக்கன் எத்தனை பேரின் உணவு..? அந்த தானியங்கள் போக்குவரத்து, கோழிக்கு செலவாகும் தண்ணீர், அவை வெளியிடும் வெப்பம், கெட்ட வாயுக்கள், கோழிகளை பராமரிக்க தேவையான மின்சாரம் இவையெல்லாம் தனி... அப்படி அசைவம் சாப்பிட்டே தீர வேண்டும் னு நெனைக்கரவங்க தன் கண் முன்னால பூச்சி புழுவ தின்னு வளர்ற நாட்டு கோழிய விழா காலங்கள் ள மட்டும் சாப்புடுங்க.. அதுதான் நம்ம சீதோஷ்ண நிலைக்கும், உடலுக்கும், மனதுக்கும், உலகத்துக்கும் நல்லது..