Thursday 1 May 2014

அட்சய திரிதியை

இன்று அட்சய திரிதியை. தங்கம் வாங்குவதை விட ஒரு நாட்டு பசுவை வாங்குவதும் (அ) நாட்டு விதைகள் வாங்குவதும் (அ) சில பனைமரங்களை நடுவதும்தான் சிறப்பான விஷயம். தங்கத்தை விட பசுவும் பனையும், நாட்டு விதைகளும் ரொம்ப நல்லது என்று சொல்லலாம்.. மகாலட்சுமி பாற்கடலில் இருந்து தோன்றிய போதே காமதேனு, கற்பக விருட்சம், வலம்புரி சங்கு போன்றவையும் தோன்றின.. எனவே மகாலட்சுமிக்கு ஒப்பான பனையும் நாட்டு பசுவும் நிச்சயம் எண்ணற்ற வளம் சேர்க்கும் என்பதில் ஐயமே இல்லை. அதுவும் கொலைக்கு கடத்தப்பட்ட மாடுகளை மீட்டு வாங்கினால் இன்னும் நலம். லட்சுமி கடாட்சத்தொடு புண்ணியமும் சேரும் பல மடங்கு பெருகும். கடத்தல் காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நாட்டு பசுக்கள் வேண்டுவோர் தனி செய்தியில் கேட்கவும்.
தங்கம் நமக்கு தருவதை விட நாட்டு பசுவும் பனையும் எண்ணற்ற நன்மைகளை செய்யும்.. நாட்டு பசுவும் பனையும் நாட்டு விதைகளும் இல்லாவிட்டால் நோயால் மற்றும் இன்ன பிற காரணங்களால் நாம் இன்று வாங்கும் தங்கம் தானாக கரைந்து போகும் என்பதில் ஐயமில்லை. வெள்ளையன் வரும் முன்னர்-தாது பஞ்ச காலத்திற்கு முன்னர் வாழ்ந்த நம் முன்னோர்கள் வழி நடப்போம். எல்லா நன்மையையும் தேடி வரும்.

No comments:

Post a Comment