Monday 17 February 2014

நம் நாட்டின் பாரம்பரியம் சொல்வது, "பூமியில் உள்ள கோடிக்கணக்கான உயிர்களை போல மனிதனும் ஒரு உயிரினம். இயற்கையோடு இணைந்து சேதப்படுத்தாமல் அனைத்து உயிர்களையும் வாழ விட்டு வாழ வேண்டும். இதையே சனாதனம் (Sustainability) என்பார்கள். சனாதனம் உள்ளூரிலேயே ஒரு சமூகம் இணக்கமாக வாழ கற்றுக்கொடுத்தது. சனாதனம் பாரத வர்ஷத்தின் கோட்பாடு. இதுவே, இயற்கையை சீரழிக்காமல், பல நூற்றாண்டுகளாக நம் மக்கள் பொருளாதார-கலாசார-அறிவுலக-சமூக முன்னோடிகளாக வாழ காரணம்.

நம் நாட்டுக்கு வந்த வெளிநாட்டவரின் தத்துவம் சொல்வது, "மனிதன் சுகிக்கத்தான் உலகை படைத்தத்தான் ஆண்டவன். அனைத்தும் மனிதனின் இன்பத்திற்காகத்தான்" என்பது. அதோடு சமூகம் குடும்பம் என்பதையும் தாழ்ந்து, தனிமனிதத்துவத்தை முன்னிறுத்துவது. அதீதமாக இயற்கையை சுரண்டி வாழ்ந்ததன் காரணமாக வெளிநாட்டவரின் வாழ்க்கை முறை கொஞ்சம் தடபுடலாக இருந்தது. பாரம்பரியத்தின் அறிவு வழியை அடித்ததன் காரணமாக வெளிநாட்டவரின் ஆடம்பர மாயத்தோற்றத்தில் மயங்கி நிற்கிறோம். வெளிநாட்டு தத்துவ தாக்கம்தான் நம் அரசியலமைப்பு சட்டத்திலேயே தனிமனிதத்துவம் மேலோங்கி நிற்க காரணம். இன்றைய இயற்கை-சமூக சீரழிவுகளுக்கு வெளிநாட்டு மத-சித்தாந்த தாக்கங்களே மூல காரணம்.

No comments:

Post a Comment