Monday 10 February 2014

கட்டமைப்பு வசதி

ஊரில் பார்த்தேன்.. கட்டமைப்பு வசதி செய்கிறோம் னு, தேவையற்ற இடங்களில் ரோடு பாலம்.. இதன் அரசியல் என்ன..? மலைகளை அழிப்பதா..? வெறும் சிமண்ட் கட்டுமான நிறுவன லாபம், ஓட்டரசியல என்று தோன்றவில்லை.. சீதோஷ்ண நிலையை சீரழிக்க நினைக்கிறார்களா..? அதனால் யாருக்கு என்ன லாபம்..?? 

கிராமங்கள் தோறும டோய்லெட்கள் திணிக்கப்படுகிறது.. மலைக்கிராமங்களில் கூட.. இதில் கிறிஸ்தவ மிஷநரிகளும் தீவிரமாக உள்ளனர். உலகமய-வணிகமய-நகரமய அரசியலா..? தேசத்தை யாருக்கு வசதியாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்..??

வீடுகள் முழுக்க கிரானைட் மார்பில் போட்டுவிட்டு மழை இல்லை என்று புலம்ப; மற்றவர்களை குற்றம் சொல்ல அருகதை இல்லை. முப்பது வருடம் மட்டுமே ஆயுள் உள்ள தற்கால வீடுகளில் கிரானைட்களை காணும் போது மீண்டும் சரி செய்யவே முடியாதபடி, எங்கோ ஒரு பகுதியின் சீதோஷ்ண நிலையை கெடுத்து வாழ்வாதாரத்தை அழித்துள்ளோம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். என் கிராமத்தில் இதுவரை இரண்டு மலைகள் காணாமல் போய்விட்டன.

No comments:

Post a Comment