Tuesday 21 January 2014

யார் யாரை காப்பது?


"நாம் இயற்கையை காக்கவில்லை. இயற்கை தான் நம்மை காக்கிறது. நாம் இயற்கையை தொந்தரவு செய்யாமல் விட்டால் போதும்; அது தன்னைத்தானே காத்துக்கொண்டு நம்மையும் வாழ வைக்கும்"

இன்று 'இயற்கையை காக்கிறேன்; மரம் நடுகிறேன்' என்ற பேரில் பல கிறுக்குத்தனங்களை செய்து வருகிறார்கள். அவரவர் விருப்பத்திற்கு கண்ணில் பட்ட மரங்கள், வெளிநாட்டு மரங்கள் என்று வாங்கி நட்டுவிட்டு ஓடி விடுகிறார்கள். எந்த விதையை-மரத்தை வளரவிட வேண்டும் என்று மண்ணுக்கு தெரியும். மண்ணிற்கு ஒவ்வாத மரங்களையும் விதைகளையும் நட்டு இயற்கையின் சமநிலையை கெடுக்காதீர்கள். அது வளர விடும் மரங்கள் எந்த பஞ்சத்தையும், சூழலையும் தாங்கி நிற்கும். மேலும் மண்ணையும் வளப்படுத்தும். காட்டில் யாரும் விதை போடவோ, உரம் போடவோ, நீர் விடவோ, முட்டு கொடுக்கவோ காவல் காக்கவோ இல்லை; இருப்பினும் பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து அங்கு இயற்கையோடு மரங்கள் வாழ்கின்றன என்பதை புரிந்து கொள்ளுங்கள். மரங்களை நடுங்கள், ஆனால் அந்தந்த சூழல்களை புரிந்து கொண்டு நாட்டு வகை மரங்களை மண்ணுக்கேற்ற மரங்களை நடுங்கள். 

இயற்கைக்கு கட்டுப்படாமல் உங்களால் மரங்களைத்தான் வளர்த்திட முடியும் ஆனால் சூழலை வளர்க்க முடியாது. 

"Unless you obey nature, You can grow trees; not Ecosystem"

No comments:

Post a Comment