Tuesday 21 January 2014

பொங்கல் செய்தி


 "கார் நடக்கும் படி நடக்கும் காராளர் தம்முடைய
ஏர்நடக்கு மெனில் புகழ்சால் இயலிசை நாடகம் நடக்கும்
சீர் நடக்கும் திருநடக்கும் திருவறத்தின் செயல் நடக்கும்
பார் நடக்கும் படை நடக்கும் பசி நடக்க மாட்டாதே" ‍
- கவிச்சக்ரவர்த்தி கம்பனின் "ஏர் எழுபது" 

உழவர்களுக்கும் பசுக்களுக்கும் வணக்கங்கள்.. பொங்கல் வாழ்த்துக்கள்.. இதை தமிழர் திருநாள் என்று உழவர்களின் மேல் உள்ள கவனத்தை திருப்பியும், இதிலும் மொழி சார் இனக்கோட்பாட்டை திணித்தும் அரசியல் செய்கிறார்கள். மொழி சார்ந்த பிரச்சனைகளுக்கு மொழி சார்ந்த ஒற்றுமை தேவையே.. ஆனால் அதுபோல பல்வேறு பிரச்சனைகள் பல்வேறு அடையாளங்களுக்காக வந்துகொண்டுதான் இருக்கின்றன (உதாரணம்: மத ரீதி யுத்தம், தேசியம் சார்ந்த யுத்தம்..). ஒவ்வொரு பிரச்சினைக்காகவும் ஒவ்வொரு இனங்களை உருவாக்கிக் கொண்டிருந்தால் நமது உண்மையான அடையாளத்தை தொலைத்து விடுவோம். அதனால் நமது உண்மையான பாரம்பரிய அடையாளம் என்ன என்பதை உணர்த்து அதில் தெளிவாகவும் ஸ்திரமாகவும் இருப்பது அவசியம்.. பல நூற்றாண்டுகள் பொருளாதாரத்தில் அசைக்க முடியா சக்தியாக பாரதம் இருக்க இந்த பாரம்பரியம் தான் அடிப்படை. கலாச்சாரத்திலும், விஞ்ஞானத்திலும் முன்னோடியாக இருந்ததற்கும் இதே பாரம்பரியம் தான் அடிப்படை. 

இன்றைய காலகட்டத்தில் ஆயுத யுத்தங்களை விட அறிவு யுத்தங்கள் தான் உலகம் முழுக்க அதிகம் நடக்கிறது. அறிவு யுத்தத்தின் ஆயுதங்கள் புத்தகங்கள், மீடியா, சினிமா தற்போது பேஸ்புக்.. சிந்தனையில் விஷம் கலந்து கொண்டிருக்கிறார்கள். யாருடைய எண்ணங்களை படிக்கிறோம், அவர்கள் பின்புலம் என்ன என்பதை உணராமல் கண்டதையும் படித்தால் பண்டிதன் ஆக முடியாது; பரதேசியாத்தான் ஆவோம்! தற்போது புத்தகத்திருவிழா என்று நடைபெறும் அனைத்திலும் பெரும்பாலும் விஷங்கள் தான் உள்ளன.

No comments:

Post a Comment