Tuesday 31 December 2013

சிக்கலில் ரியல் எஸ்டேட் துறை


ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கியுள்ள 1.2 லட்சம் கோடி கடனை வசூலிக்க நிர்பந்திக்குமாறு சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே விற்காமல் விலை வீழ்ச்சியில் வீடு மனைகள் உள்ளபோது, நிறுவனங்களுக்கு இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

போன மாதம் சிதம்பரத்தின் அறிவுறுத்தலின் பேரில் முடுக்கிவிடப்பட்ட இந்த வசூல் நடவடிக்கை இப்போது தீவிரமடைந்துள்ளது. வட்டி மற்றும் சலுகைகளையும் குறைக்கும் திட்டமும வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இதன் மூலம், ரியல் எஸ்டேட் காரர்கள் வீடு/மனைகளை குறைத்து விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நகர்ப்புறங்களிலேயே இப்படியென்றால் கிராமப்புறங்களில் இந்த வீழ்ச்சி மிகவும் மோசமடைந்துள்ளது. புதிதாக யாரும் பிளாட் பிரிக்க நிலங்களை வாங்க முன் வராததால் விவசாய நிலங்கள் தப்பின.

No comments:

Post a Comment