Tuesday 31 December 2013

நூறு நாள் வேலையை விவசாயத்துக்கு மாற்றுங்கள்!



நூறு நாள் வேலைத் திட்டத்துக்கான ஊதியத்தை 119 ரூபாயிலிருந்து 132 ரூபாயாக உயர்த்தியிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பயனாளிகளுக்கு வழங்கப்படும் பணி மற்றும் ஊதியத்தை தணிக்கை செய்ய, ஒரு அமைப்பை உரு...
வாக்கியுள்ளார்.
ஊதிய உயர்வெல்லாம் சரிதான். ஆனால், இந்த 100 நாள் திட்டத்தின் மூலமாக பணிகள் சரிவர நடக்கின்றனவா என்பதை யார் தணிக்கை செய்வது? ''நூறு நாள் வேலை' என்கிற பெயரில்... ஆங்காங்கே குளம், வாய்க்கால், சாலையோரம் என்று முளைத்துக் கிடக்கும் புற்களை மட்டும் மேலாக செதுக்கிவிட்டு... தூர் எடுத்ததுபோல கணக்குக் காட்டப்படுவதுதான் நடக்கிறது. அதிலும், ஒவ்வொரு கிராமத்திலும் 100 நாட்களுக்கு வெட்டும் அளவுக்கு குளம், வாய்க்கால்கள் எல்லாம் இருக்கின்றனவா என்ன?

'ஏதாவது ஒரு ரூபத்தில் பணத்தைக் கொடுத்தால், அந்த மக்களின் ஓட்டு நமக்கே' என்கிற நோக்கம் மட்டும்தான் இந்தத் திட்டத்தில் கண்கூடாக தெரிகிறது! ஆனால், கடந்த காலத்தில் இப்படி கொடுத்துக் கொண்டிருந்த கருணாநிதி, வீட்டுக்கு அனுப்பப்பட்டார் என்பதுதான் உண்மை.

சரி அரசியல் கிடக்கட்டும்... இந்தத் திட்டத்தின் காரணமாக விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது என்பதை பல முறை வலியுறுத்தியும், அரசாங்கம் அதை கண்டுகொள்ளவே இல்லை. இதோ... அண்டை மாநிலமான கேரளாவில், இதே திட்டத்தை விவசாயப் பணிகளுக்கு வெற்றிகரமாக பயன்படுத்தி வருகின்றனர்.
அதுபோல, இங்கும் செய்தால்... தொழிலாளர்களுக்கும்... விவசாயத்துக்கும் நிச்சயம் பலன் இருக்கும்!

நன்றி : பசுமை விகடன்

No comments:

Post a Comment