Tuesday 31 December 2013

தமிழா-விஷ உணவுதான் உனக்கு விதி!



காவிரி பாயும் தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மை மூலம் மருந்து/ரசாயனம் இல்லா உணவு பொருட்கள் தயாரிப்பு என்பது முழுமையான உண்மை அல்ல. சொன்னால் நம்ப முடிகிறதா..?? ஆனால் அதுதான் யதார்த்தம். 

ுறிப்பாக ஈரோடு நாமக்கல் மாவட்டங்கள் தாண்டியபின் காவிரி வரும் அனைத்து மாவட்டங்களிலும் இயற்கை விளைபொருட்கள் என்று சொல்லே பயன்படுத்தமுடியாது. தோலில் பட்டால் கொப்புளம் வருமளவு மோசமான சாய விஷ நீரை தாங்கிக்கொண்டு, போதாகுறைக்கு நொய்யல் மற்றும் காளிங்கராயன் விஷத்தையும் தாங்கிக்கொண்டு வரும் காவிரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்தும்போது உரம் பூச்சிகொல்லிகளை விட மோசமான ரசாயன மூலக்கூறுகள் விளைபொருட்களுக்குள் ஏறிவிடுகிறது. இது மட்டுமில்லாது இந்த சாய விஷம் கலந்த காவிரி நீர் நிலத்தடி நீரிலும் கலந்து அதையும் கேடுத்துவிடுகிறது. இதுமட்டும் இல்லாமல் ஈரோட்டின் பின் வரும் எந்த மாவட்டங்களிலும் முறையான சுத்திகரிப்பு செய்தபின்னே காவிரியில் கலக்கும் படியான செயல்பாடுகள் இல்லை. 

கரூரிலும் ஜவுளி நிறுவனங்கள் புண்ணியத்தால் இதே விஷம் மீண்டும் கலக்கிறது. மேட்டூரை சுற்றி வந்தால் அங்கு எத்தனை கொடிய கெமிகல் ஆலைகள் உள்ளன என்பது தெரியும். அவற்றில் ஒன்றிரண்டை தான் இயற்கை ஆர்வலர்களால் தடுக்க முடிந்தது. இவை இல்லாமல் ஈரோடு, கரூர், நாமக்கல்லில் காகித சர்க்கரை ஆலைகளும், திருச்சியில் உள்ள தொழிற்சாலைகளும் தங்கள் பங்குக்கு நீரை மாசுபடுத்துகிறார்கள். தற்காலங்களில் தமிழ்நாட்டின் நீர் உப்பு விகித்தத்திலும் கெமிக்கல் விகிதத்திலும் அபாயகரமான நிலையை தொட்டுள்ளதை அறிகிறோம்.

நிலத்தையும், இடுபொருட்களையும் மட்டும் ரசாயனமற்றதாக வைத்திருந்தால் போதாது, பயிர்கள் எடுக்கும் நீரும் விஷமற்றதாக இருக்க வேண்டும். நிலை இவ்வாறு இருக்க சுத்தமான இயற்கைவிவசாய விளைபொருள் என்பது பொய்யான வார்த்தைகளாகவே தெரிகிறது. பூரண விஷமற்ற உணவு வேண்டுமானால் அது ஈரோடு திருப்பூர் சாய தோல் ஆலை அதிபர்கள் கையில் தான் உள்ளது.


No comments:

Post a Comment