Tuesday 31 December 2013

தமிழ்நாட்டின் (சீமை)சாராய சாம்ராஜ்யம்


போதை பழக்கத்தை நியாயபடுத்த/சகஜபடுத்த வேண்டாமே.. அதனால் அழிந்த குடும்பங்கள் எத்தனையோ. குடி என்பது சூழ்நிலையால் அமையும் சாபம்.. அதனை நாகரீகத்தின் அடையாளமாக மாற்றியிருப்பது அரசு/கார்ப்பரேட் உலகின் தந்திரம். பெண்களும் தங்கள் சமஉரிமையை நிலைநாட்ட/வெளிக்காட்ட புட்டியை பிடிப்பது கொடுமையிலும் கொடுமை..

திரைப்படங்களும் தமது பங்குக்கு மதுப்பழக்கத்தை ஹீரோயிசம்/வீரம்/ஸ்டைல் என்பது போன்று சித்தரிக்கின்றன.மதுபோதை பழக்கத்தை வெளியில் சொல்ல ஒவ்வொருவனும் வெட்கபடும சூழல் உருவாக வேண்டும்.

*13 வயதில் மதுப்பழக்கம் - குற்ற துணிவு
*போதையில் கொலை/கற்பழிப்பு
*குடிக்க பணம் மறுத்ததால் வெட்டு/வழிப்பறி
*கிட்னி/லிவர்/மூளை கோளாறுகள்-ஆன/பெண் மலட்டுத்தன்மை-அதனால் விவாகரத்துக்கள்.
*போட்டிபோட்டு குடித்து மரணம்
இவை தற்காலத்தில் அதிகம் செய்திகளில் தெரிபவை.

டாஸ்மாக் எனும் சாபக்கேடு தமிழகத்தில் வர மூலகாரணமாக இருந்த அன்றைய நிதியமைச்சர் சி.பொன்னயன் மற்றும் அதை தொடர்ந்து பற்றிக்கொண்ட அரசுகளின் சமூக பொறுப்பிற்கு பாராட்டுக்கள்..!

(டீலக்ஸ் கடைகள் வைத்து வெளிநாட்டு மது விற்பனைக்கும் வந்துவிட்ட அரசு - உடலை கெடுக்காத/உழவரை காக்கும் உள்நாட்டு இயற்கை கள்ளுக்கு இன்னும் தடை போட்டுதான் உள்ளது!!)



No comments:

Post a Comment