Tuesday 31 December 2013

எத்தனாலும் இந்திய பொருளாதாரமும்


வாட்டும் பெட்ரோல்/டீசல் விலை,அதனால் எரிய விலைவாசி அதை தொடர்ந்து சரிந்த இந்திய பொருளாதாரத்திற்கும் பாரம்தாங்கி போல் ஒரு யோசனையை நமது கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஐயா திரு.நல்லசாமி அவர்கள் சொன்னார்.

சர்க்கரை உற்பத்தி செய்யும் ஆலைகளில் பாதியை எத்தனால் உற்பத்திக்கு மாற்றி பெட்ரோல்/டீசலில் கலந்து பயன்படுத்துவது. இதனால் பிரேசில் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளது போல் 5-50% வரை கச்சா எண்ணெய் தேவையை குறைக்க முடியும்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை குறைந்து அதனால் அந்நிய செலாவணியும் பெருமளவு சேமிக்க படும்! (போன வருட கணக்குபடி கச்சாஎண்ணெய்க்கு செலவிடபட்டது மானியம் மட்டும் 7லட்சத்து 56ஆயிரம் கோடி. இதில் 10 சதவீதம் சேமித்தாலும் 75,600 கோடி அந்நிய செலாவணி சேமிக்கப்படும்!) அதன்மூலம் ரூபாய் மதிப்பும் உயர வழிவகுக்கும். இந்த எதனாலும் மரபு சாரா எரிபொருள். இயற்கை வளங்களை கெடுக்காது. காற்று மாசு, கச்சா எண்ணை சுத்திகரிக்க தேவைப்படும் மின்சாரம், அதன்மூலம் வெளிப்படும் நச்சு கழிவுகள் அனைத்தும் நடக்காது, சுற்று சூழலை கெடுக்காது! கரும்பு விவசாயிகளுக்கு ரூ.2,000 கொடுக்க திணறும் கரும்பு ஆலைகளும் டன்னுக்கு ரூ.3,200 - 5000 தர இயலும்!

இன்று சர்க்கரை உற்பத்தியின் போது கிடைக்கும் மொலாசசில் இருந்து சாராய வகைகள் (பீர் உட்பட) தயாரிக்கின்றனர். இந்த மொலாசசில் கந்தகம் (சல்பர்) உட்பட அனைத்து நச்சு ரசாயனங்களும் சேர்க்கபடுகிறது. இதனால் தான் சர்கரையை நம்மாழ்வார் ஐயா வெள்ளை விஷம் என்கிறார். கள்ளை அனுமதிப்பதால் விலை இன்றி தேங்காய் உடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தென்னை விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறுவார். பனை விவசாயிகள் & தொழிலாளர்கள் லாபமடைவார்கள். மக்களின் உடல்/பொருளாதார நலன் காக்க படும்.புதிய தொழில், வேலை, ஏற்றுமதி வாய்புகள் உருவாகும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி திரு நல்லசாமி அவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை போன மாதம் துவங்கி இன்று வரை நாடு முழுவதும் சுற்று பயணம் செய்து கொண்டிருக்கிறார்.

நம்மாழ்வார் ஐயாவின் இயற்கை வாழ்வியல் படி வாழ்ந்தால் இந்த பெட்ரோல் டீசலும் தேவை இல்லை கருமுப் பயிரும் சர்க்கரை ஆளைகலுமே தேவை இல்லாமல் போய்விடும்!

No comments:

Post a Comment