Tuesday 31 December 2013

தற்கால அறிவியலை கொண்டு நம் பாரம்பரிய அறிவுசெல்வத்தை எடை போட நினைப்பது வேடிக்கையானது. தற்கால அறிவியல் என்பது பெருநிறுவனங்கள் வளர்ச்சிக்கே பெரிதும் துணை நிற்பவை. பாரம்பரிய மரபுகளை புரிந்துகொள்ள தற்கால அறிவியல் உலகம் இன்னும் நிறைய காம்ப்பிலான் குடிக்க வேண்டும். புரிந்துகொள்ள முடியாமையால் பொய் என்றும் கூட சொல்கிறோம், ஆனால் அதன் பயன்களை அனுபவிக்க தயங்குவதே இல்லை. கம்யுனிஸ்ட் மற்றும் திராவிட கும்பல்கள் பரப்பிய ஒழுக்கமான (!!) வாழ்க்கையால் பல நோய்களை பெற்றவர்கள் தங்கள் கறுப்பு/சிவப்பு சட்டைகளை கழற்றிவிட்டு, கள் குடிக்க செல்பவனைப்போல விடிகாலை பனிமூட்டத்தில் முக்காடு போட்டுகொண்டு ஈரோடு கோசாலைகளில் வந்து அர்க் மற்றும் பஞ்சகவ்ய மருந்துகள் வாங்கி குடிக்கிறார்கள். ஒரு காலத்தில் பசுவையும் பஞ்சகவ்யத்தையும் பலித்தவர்கள் இவர்கள்..

No comments:

Post a Comment