Tuesday 31 December 2013

நாட்டு பசுக்கள்


பூந்துறை நாட்டை (ஈரோடு திருச்செங்கோடு) சுற்றி என் கேமரா கண்ணில் பட்ட நாட்டு மாடுகள்..

நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன்ற சிற்பங்கள் பல கோவில்களில் காணலாம்..

இன்று தங்கள் இஷ்டப்படி கோவிலின் இடத்தை மாற்றுகிறார்கள். கோயிலின் புராதனம்-தொண்மை இதனால் அழிகிறது.



ஈரோடு சாவடிபாளையத்தில் உள்ள கோசாலையில்..
பூந்துறை நாட்டை (ஈரோடு திருச்செங்கோடு) சுற்றி என் கேமரா கண்ணில் பட்ட நாட்டு மாடுகள்..




என் குலகுரு மடம் (அருணகிரி அய்யம்பாளையம்) 
 கீகரை மாடு (மழகொங்கு மாடு)-நாட்டு மாட்டு வகைகளிலேயே அதிகம் பால் தரக்கூடிய தமிழ்நாட்டு பசு.. எங்க ஊருக்கு புது வரவு... நாட்டு மாட்டு பலன்களை சொல்லியதன் விளைவு, எங்க ஊர் மாட்டு பட்டியில் போன வாரத்தில் மட்டும் இரண்டு நாட்டு மாடுகள் வந்து சேர்ந்துள்ளன. இது இன்னும் வளரும்!


ஈரோடு தம்பிரான் மெடிக்கல்ஸ்இல் நாட்டு மாட்டு பால் விற்கிறார்கள்.. கடையில் நாட்டு மாடு/கலப்பின பன்றிகளின் பாலில் உள்ள நன்மை தீமை பற்றிய தகவல்..

இன்று இயல் வாகை நாற்று பண்ணை சென்றிருந்தேன். அங்கு உள்ள குழந்தைகள், நண்பர்கள் மற்றும் அவர்களது செயல்பாடுகள் மிக அருமை. விட்டு பிரியவே மனமில்லை.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல இன்று நாற்று பண்ணையில் உள்ள மகாலக்ஷ்மி க்கு (நாட்டு மாட்டிற்கு பொருத்தமான பெயர்) கோ-பூஜை நடந்தது. கோல்ந்தைகளோடு அனைவரும் கோ-பூஜையில் கலந்து கொண்டோம். மனதிற்கு நிறைவாக இருந்தது.
 


எங்கள் ஊருக்கு அருகில்.. என்ன வகை மாடு என்று அறிய வேண்டும்..


பூந்துறை நாட்டை (ஈரோடு திருச்செங்கோடு) சுற்றி என் கேமரா கண்ணில் பட்ட நாட்டு மாடுகள்..

என் குலகுரு மடம் (அருணகிரி அய்யம்பாளையம்) செல்லும் வழியில்..


திருவகழிமங்களம் எனப்படும் இன்றைய கொக்கராயன்பேட்டையில் யாரோ கோதானம் கொடுத்துள்ளார்கள். விவரம் அறிந்தவர் என்று எண்ணுகிறேன். அறியாமையால் யாரோ ஒருவர் சிந்து பன்றியையும் கொடுத்துள்ளார் (பின்னால் நிற்கிறது. அதன் பாலை இறைவனுக்கு பயன்படுத்துவது தவறு)

கொங்க மாடுகளில் இது திருசெங்கோட்டு மாடு (கீகரை மாடு) வகையை சேர்ந்தது. குட்டை கால்கள் தட்டை முதுகு, விரிந்த கொம்புகள்.. தமிழ்நாட்டிலேயே அதிக பால் தர கூடிய நாட்டு மாட்டு வகை இது.. வேளைக்கு மூன்று லிட்டர்.. மோர்பாளையம் சந்தை மற்றும் காளிப்பட்டி சந்தையில் கிடைக்கும்..

பூந்துறை நாட்டை (ஈரோடு திருச்செங்கோடு) சுற்றி என் கேமரா கண்ணில் பட்ட நாட்டு மாடுகள்..

காளிங்கராயர் பிறந்த கனகபுரம் அருகே..

அந்நாளில் நாட்டு மாட்டின் தயிரையோ பாலையோ கலயத்தில் கட்டிக்கொண்டு அமாவசை போன்ற தினங்களில் கோவிலுக்கு செல்வார்கள். சென்னிமலையில் அந்த அபிசேக தயிரை பெரிய வெள்ளை துணியில் கட்டி வைப்பார்கள். அதில் உள்ள திரவங்கள் வடிந்து திட பால் பொருள் கிடைக்கும். அந்த மாவினை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தினர்.

இந்த சிற்பம் சென்னிமலையாண்டவர் கோவில் படிக்கட்டு மண்டபத்தில் எடுத்தது..


பூந்துறை நாட்டை (ஈரோடு திருச்செங்கோடு) சுற்றி என் கேமரா கண்ணில் பட்ட நாட்டு மாடுகள்..

என் குலகுரு மடம் (அருணகிரி அய்யம்பாளையம்) செல்லும் வழியில்..


 ஈரோடு மாநகரில்



ஈரோடு மாநகரில்.. பஸ் ஸ்டாண்ட் அருகில்.. நாட்டு பசுக்களின் அருமை அறிந்தவர்..


எங்கள் பகுதியில் உள்ள ஒரே ஒரு பூச்சி காளை இதுதான்... அரிதாகி வரும் கீழ்க்கரை பூந்துறை நாட்டின் காளைமாடு.. (மழகொங்க மாடு).. 

இதன் உரிமையாளர் இதனை பக்ரீத் பண்டிகைக்கு வெட்டுக்கு கொடுக்கப்போகிறார்.. அதற்குள் இதை மீட்டு விட வேண்டும்.. எங்கள் ஊரில் பலர் புதிதாக மழகொங்க மாடு வாங்கியுள்ளார்கள். அவர்களுக்கு பயன்படும்.

குறிப்பு: தமிழக இனங்களிலேயே அதிக பால் தரும் நாட்டு பசு வகை (வேளைக்கு மூன்று லிட்டர் வரை கறக்கும் இனம்)

No comments:

Post a Comment