Tuesday 31 December 2013


கடந்த 2010 ஆண்டு, ஒரு நள்ளிரவில், ஈரோடு நசியனூரை சேர்ந்த விவசாயி ராமசாமி அவர்கள் தோட்டத்தில் அவர் பல வருடம் பாடுபட்டு வளர்த்த சந்தன மரத்தை சமூக விரோதிகள் அறுத்து கொண்டிருந்தார்கள். 

விழித்து கொண்ட அவரை ரம்பத்தால் அறுக்கவும் துணிந்து விட்டனர். எவ்வளவு சொல்லியும் கேட்காததால் தற்காப்புக்கு உரிமத்துடன் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு எச்சரிக்கை செய்தும் ஆபத்து நீங்கா நிலையில் அந்த சமூக விரோதிகளில் ஒருவனை சுட்டு விட்டார். இந்த சம்பவத்தை சுடபட்டவன் மரண வாக்குமூலத்தில் உறுதி செய்துள்ளான். இருந்தும் திரு ராமசாமி (60) அவர்களை இரண்டு வருடங்களுக்கு மேலாக வழக்கு பதிந்து அலைகழித்து வருகிறார்கள்.

இதே போன்றதொரு சம்பவதிற்கு கர்நாடக அரசு அம்மாநில விவசாயிக்கு பாராட்டி பரிசு வழங்கி கவுரவித்தது. இங்கே?

தன் தற்காப்புக்கு கூட உரிமை துப்பாக்கியை பயன்படுத்த முடியாத போது, எதற்கு இன்னும் உரிமை துப்பாக்கி? இதே திரு ராமசாமியை அவர்கள் கொன்று இருந்தால்..?

என்கவுண்டர் போலிசாருக்கு பதவி உயர்வு அழிக்கும் நம் அரசு இந்த விவசாயியை மட்டும் வஞ்சிப்பதேன்..?? 

இந்த விவசாயிக்கு நீங்கள் ஏதேனும் உதவ விரும்பினால், முதல்வர் தனிப்பிரிவு, பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ, சட்டத்துறை அமைச்சர் போன்றோருக்கு மனுவை மின்னஞ்சல் அனுப்பவும்


No comments:

Post a Comment